October 4, 2007

மதயானை

வழிபாட்டுத்தலங்களில் பகைப்புகை.
சிலுவை சுமந்த கிருஷ்ணனும்
குழலூதும் அல்லாவும்
வெண்ணை உண்ணும் கிருஸ்துவும்
நெடி தாளாது விரைந்து வெளியேறினர்.
யாருமில்லை இப்போது அங்கு-
வால் நீங்கா சில மனிதர்களைத் தவிர.

4 comments:

கானகம் said...

உனது கவிதை " பாதைகள் பலவானாலும் சேருமிடம் ஒன்றே" என்பதை வலியுறுத்துகிறது எனக்கொள்கிறேன்.

//யாருமில்லை இப்போது அங்கு-
வால் நீங்கா சில மனிதர்களைத் தவிர.//

இவர்கள் மனிதர்களாவதற்கு பிடிக்கும் பல யுகங்கள்.. ஜெயக்குமார்

பிரகாஷ் said...

நன்றி ஜெயக்குமார்.

Anonymous said...

நல்ல கவிதை ப்ரகாஷ். தொடர்ந்தூ எழுதுங்கள்..

பிரகாஷ் said...

சுப்ரமணியசாமி,
ஊக்கத்திற்கு மிக்க நன்றி.
தொடர்ந்து வாசிக்கவும்.